Home முக்கியச் செய்திகள் பிள்ளையானை நேரில் சென்று பார்வையிட்ட கோட்டை நீதவான்!

பிள்ளையானை நேரில் சென்று பார்வையிட்ட கோட்டை நீதவான்!

0

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் உட்பட ஒன்பது பேரை கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவு மூலம் அறிக்கை சமர்ப்பித்து விடுக்கப்பட்ட கோரிக்கையை கருத்தில் கொண்டு நீதவான் இவ்வாறு அவர்களை பார்வையிட்டுள்ளார்.

அதன்படி, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினர் கணேமுல்லே சஞ்சீவவின் கொலைக்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி மற்றும் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் உட்பட ஒன்பது பேரை கோட்டை நீதவான் கண்காணித்தார்.

NO COMMENTS

Exit mobile version