கடந்த ஓகஸ்ட் 26 மற்றும் 27 ஆகிய இரு விடுமுறை நாட்களில் அதிவேக நெடுஞ்சாலைக் கட்டமைப்பைப் பயன்படுத்திய வாகனங்கள் மூலம் 124,574,925 ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த இரு நாட்களிலும் மொத்தம் 325,316 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்துள்ளன.
120 மில்லியன் ரூபா வருமானம்
ஓகஸ்ட் 27ஆம் திகதி 161,553 வாகனங்கள் பயணித்துள்ளதுடன், 64,164,930 ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
இந்தக் காலப்பகுதியில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை (E01) மற்றும் வெளிவட்ட அதிவேக நெடுஞ்சாலை (E02) ஆகியவற்றிலேயே அதிகளவிலான வாகனப் போக்குவரத்து பதிவாகியுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.
YOU MAY LIKE THIS VIDEO
Source: https://tamilwin.com/article/expressways-generate-over-rs-124-million-1787893587
