Home இலங்கை சமூகம் பெரும்பான்மையின மக்களால் அபகரிக்கப்படும் தமிழரின் காணிகள்: துரைராசா ரவிகரன் களவிஜயம்

பெரும்பான்மையின மக்களால் அபகரிக்கப்படும் தமிழரின் காணிகள்: துரைராசா ரவிகரன் களவிஜயம்

0

கொக்குதொடுவாய் பகுதியில் தமிழ் மக்களின் காணிகளை பெரும்பான்மையினர்
அபகரிக்கும் செயற்பாடு இடம்பெற்று வருவது தொடர்பில் ஆராயும் முகமாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட குழுவினர் குறித்த பகுதிக்கு கள விஜயம் ஒன்னை மேற்கொண்டுள்ளனர்.

சூழலியல், மற்றும் சமூக
அபிவிருத்திக்கான நிறுவனமும், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா
ரவிகரன் உள்ளிட்ட குழுவினர் குறித்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

முல்லைத்தீவு , கொக்குதொடுவாய் பகுதியில் கோட்டக்கேணி அம்பட்டன் வாய்க்கால், வெள்ளக்கல்லடி,தொட்ட கண்ட குளம் போன்ற இடங்களில் குடியமர்த்தப்பட்ட சிங்கள
மக்கள் அங்குள்ள தமிழ்மக்களுக்கு சொந்தமான வேறு காணிகளை துப்பரவு செய்து
கொண்டிருப்பதாக கிடைக்கபெற்ற தகவலையடுத்து இன்றையதினம் (29.04.2024) கள
விஜயம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ரணில் – மைத்திரி இரகசிய சந்திப்பு : சூடு பிடிக்கும் தென்னிலங்கை அரசியல் களம்

மகாவவலி அபிவிருத்தி அதிகாரசபை

இது தொடர்பாக களவிஜயம் மேற்கொண்ட துரைராசா
ரவிகரன்
அக்காணிகளை ஏற்கனவே தமக்கு மகாவவலி அபிவிருத்தி அதிகாரசபை 2015ஆம் ஆண்டு
தந்திருப்பதாக கூறியே பெரும்பான்மை மக்கள் துப்பரவு செய்யவதாக தெரிவித்துள்ளார்.

இதற்குரிய நடவடிக்கைகளை கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தினரே கண்கானிக்க வேண்டும் எனவும், ஆனால் அவர்கள் சென்று பாராமுகமாக செயற்படுவதாகவும் கூறியுள்ளார்.

குறித்த இடம் ஏற்னவே
தமிழ்மக்களுக்கு வழங்கப்பட்ட காணி என்றும், அதற்கு அடுத்தகட்ட நடவடிக்கையாக நாம்
கலந்துரையாடவுள்ளோம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். 

தென்னிலங்கையில் ஒரே நேரத்தில் ஏற்பட்ட திடீர் சுகயீனம் : மூவர் மரணம் – ஆபத்தான நிலையில் மற்றுமொருவர்

சர்ச்சைக்குரிய தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் விவகாரத்திற்கு முடிவு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version