Home இலங்கை குற்றம் முல்லைத்தீவில் குடும்ப பெண் அணிந்திருந்த தங்க சங்கிலி கொள்ளை

முல்லைத்தீவில் குடும்ப பெண் அணிந்திருந்த தங்க சங்கிலி கொள்ளை

0

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மன்னாகண்டல் வீதியில் இரவு நேரங்களில்
பயணித்த குடும்ப பெண் ஒருவர் அணிந்திருந்த தங்க சங்கிலி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான முறைப்பாடு நேற்றையதினம் (19.10.2024) புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த குடும்பப் பெண் புதுக்குடியிருப்பில் இருந்து நேற்று முன்தினம் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.

மேலதிக விசாரணைகள்

இதனையடுத்து, கறுப்பு மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் பெண்ணின் கழுத்தில் இருந்து தங்க சங்கிலியினை அறுத்து சென்றுள்ளார்.

இந்நிலையில், சம்வம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version