Home முக்கியச் செய்திகள் யாழில் சொந்த மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆசிரியர் கைது

யாழில் சொந்த மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆசிரியர் கைது

0

யாழில் 10 வயது மகளை பல நாட்களாக பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த தந்தை ஒருவர் காவல்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் யாழ்ப்பாணம் (jaffna) – இளவாலை காவல் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் பகுதியை சேர்ந்தவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் பண்ணாகம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், தனது மகளை பல நாட்களாக பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார்.

சம்பவம் குறித்து இளவாலை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.  

NO COMMENTS

Exit mobile version