Home இலங்கை FCID விசாரணைக்கு முன்னதாக அதிகாலை சிங்கப்பூர் பறந்த ஷிராந்தி ராஜபக்ஷ!

FCID விசாரணைக்கு முன்னதாக அதிகாலை சிங்கப்பூர் பறந்த ஷிராந்தி ராஜபக்ஷ!

0
image

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ இன்று (16) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

அவருடன் ரோஹித ராஜபக்ஷவின் மாமியாரான ஏன்.டி. லிவேராவும் சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் இன்று அதிகாலை 1.10 மணியளவில் சிங்கப்பூர் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான SQ-469 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் நோக்கிப் பயணித்துள்ளனர்.

இந்நிலையில், ஷிராந்தி ராஜபக்ஷ எதிர்வரும் செப்டெம்பர் 24ஆம் திகதி நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) ஆஜராகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://samugammedia.com/shiranthi-rajapaksa-flew-to-singapore-early-in-the-morning-ahead-of-the-fcid-investigation-1789533518

NO COMMENTS

Exit mobile version