Home இலங்கை அரசியல் உரம் – எரிபொருள் மானியம் : தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு

உரம் – எரிபொருள் மானியம் : தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு

0

பொதுத் தேர்தல் முடியும் வரை உரம் மற்றும் எரிபொருள் மானியம் வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission of Sri Lanka) அறிவித்துள்ளது.

இந்தநிலையில், இது தொடர்பான கடிதங்கள் உரிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சட்ட மற்றும் விசாரணைகளுக்கான துணை தேர்தல் ஆணையர் பி.பி.சி.குலரத்ன (B.P.C. Kularatne) தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர மானியத்தை இடைநிறுத்துவதற்கு விவசாய அமைச்சுக்கு (Ministry of Agriculture) முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம்

கட்ற்றொழிலாளர்களுக்கான எரிபொருள் மானியத்தை நிறுத்துவது தொடர்பான கடிதம் கடற்றொழில் அமைச்சுக்கு (Ministry of Fisheries) அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பிரதி தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பான கடிதங்களின் பிரதிகள் நிதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version