Home இலங்கை சமூகம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய வயல் நிலங்கள்

கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய வயல் நிலங்கள்

0

திருகோணமலை (Trincomalee) மாவட்ட தம்பலகாமம், கிண்ணியா பிரதேச செயலகப் பகுதிகளில் உள்ள வயல்
நிலங்கள் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

தம்பலகாமம் கோயிலடி பகுதியை அண்டிய வயல் நிலங்களும் கிண்ணியா சூரங்கல் பகுதியை
அண்டிய பல ஏக்கர் வயல் நிலங்களும் நீரில் மூழ்கியுள்ளது.

குளத்தின் வான் கதவுகள்

தற்போது நிலத்தை
பதப்படுத்தி நெற் செய்கைக்காக விதைத்து ஓரிரு நாட்களின் பின்பே கனமழை காரணமாக
நீரினால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.

இதனால் மீண்டும் விதைக்க வேண்டியுள்ளதாக
விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கந்தளாய் குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதாலும் நெற் செய்கை
நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version