Home இலங்கை அரசியல் மட்டக்களப்பில் வேட்பு மனு தாக்கல் குறித்து அரசாங்க அதிபரின் கருத்து

மட்டக்களப்பில் வேட்பு மனு தாக்கல் குறித்து அரசாங்க அதிபரின் கருத்து

0

33 சுயேட்சைக் குழுக்களும், 23 கட்சிகளும் பாராளுமன்ற தேர்தலுக்காக
மட்டக்களப்பில்
வேட்பு மனுவினை தாக்கல் செய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணா அம்மான்,
எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் சிவனேசதுரை சந்திரகாந்தன் ஆகியோரது
கட்சிகள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் தமது வேட்பு மனுக்களை தாக்கல்
செய்துள்ளனர்.

எதிர்வரும் 14 ஆம் தேதி இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு
மனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் கடந்த (4) திகதி முதல் மட்டக்களப்பு
ஒல்லாந்தர் கோட்டையில் அமைந்துள்ள பழைய மாவட்ட செயலக கட்டடத்தில் இடம்பெற்று
வந்தது.

இந்நிலையில், இறுதித் தினமான நேற்று வரை 33 சுயேட்சை குழுக்களும் 23 அரசியல்
கட்சிகளும் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் குறிப்பிடுகையில்,

NO COMMENTS

Exit mobile version