Home இலங்கை பொருளாதாரம் வாகன இறக்குமதி தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்

வாகன இறக்குமதி தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்

0

வாகன இறக்குமதித் தடையை நீக்குவது தொடர்பான இறுதித் தீர்மானம் 2024 ஓகஸ்ட் இரண்டாம் வாரத்தில் எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.

இன்று (10) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாடு எந்தப் பிரச்சினையையும் சந்திக்காத வகையில் விசேட வேலைத்திட்டத்தின் கீழ் வாகன இறக்குமதியை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியம்

அத்துடன், வாகன இறக்குமதி தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்திற்கும் அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், 2025 ஆண்டுக்கு முதல் வாகன இறக்குமதியில் இருக்கும் தடைகளை தளர்த்தும் விருப்பத்தை சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

 

Source: https://ibctamil.com/article/final-decision-lifting-of-vehicle-import-ban-1720596369

NO COMMENTS

Exit mobile version