Home இலங்கை அரசியல் அனைத்து அரச நிறுவனங்களிலும் கட்டாயமாகும் நடைமுறை

அனைத்து அரச நிறுவனங்களிலும் கட்டாயமாகும் நடைமுறை

0

நாட்டிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும் கைரேகை இயந்திரங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

அரச சேவையின் செயல்திறனை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் மூலம், அரச ஊழியர்களின் வருகை மற்றும் புறப்பாடு முறையான அமைப்பின் மூலம் கண்காணிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வருகை பதிவு

பிரதேச செயலகங்கள் உட்பட பல அரச நிறுவனங்களில் இந்த கைரேகை இயந்திரங்கள் ஏற்கனவே வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

வருகையை பதிவு செய்யும் போது ஏற்படும் சில முறைகேடுகள் மற்றும் பிழைகளை சீர்செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய முறையை அறிமுகப்படுத்துவதன் முக்கிய நோக்கம், அரச ஊழியர்களின் சேவை நேரத்தை முறையாக நிர்வகிப்பதும், அதன் மூலம் பொது சேவையை நெறிப்படுத்துவதும் ஆகும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version