Home இலங்கை சமூகம் கொழும்பு புறக்கோட்டை பகுதியில் தீப்பரவல்

கொழும்பு புறக்கோட்டை பகுதியில் தீப்பரவல்

0

கொழும்பு புறக்கோட்டை மலிபன் வீதியில் உள்ள இல 41 விலாசம் கொண்ட கட்டிடம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று (08.10.2024) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீயணைப்பு படையினர் 

இந்நிலையில், ஆறு தீயணைப்பு வாகனங்கள் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், தற்போது தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் தீயணைப்பு படையினர் தொடர்ந்தும் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்

தீப்பரவலுக்கான காரணம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

Source: https://tamilwin.com/article/fire-spread-in-pettah-colombo-1728370958

NO COMMENTS

Exit mobile version