Home இலங்கை சமூகம் நோட்டன்பிரிட்ஜில் மூன்று வர்த்தக நிலையங்களில் தீ பரவல்

நோட்டன்பிரிட்ஜில் மூன்று வர்த்தக நிலையங்களில் தீ பரவல்

0

நோட்டன்பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹகராபிடிய – ஜம்புதென்ன பகுதியில்
மூன்று வர்த்தக நிலையங்களில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

இன்று (14.03.2025) அதிகாலை 1.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ பரவல் ஏற்பட்ட வர்த்தக நிலைய கட்டடத்தொகுதியின் உரிமையாளர் ஒருவர் எனவும்,
சம்பவத்தின்போது அங்கு எவரும் இருக்கவில்லை எனவும் தெரியவருகின்றது.

இரு கடைகள் பகுதியளவில் சேதம்

தீ விபத்தில் ஒரு கடை முற்றாக தீக்கிரையாகியுள்ளது. ஏனைய இரு கடைகளும்
பகுதியளவு சேதமடைந்துள்ளன.

மின்கசிவு காரணமாக தீ பரவல் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இது
தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version