Home இலங்கை கல்வி 5ஆம் ஆண்டு புலமை பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகின..!

5ஆம் ஆண்டு புலமை பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகின..!

0

2024ஆம் ஆண்டின் 5ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 6ஆம் வகுப்புக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான பாடசாலை வெட்டுப்புள்ளிகள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, மாணவர்கள் இன்று (14) முதல் கல்வியமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளத்தை பயன்படுத்தி தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளைச் சரிபார்க்கலாம் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

புள்ளியை பெறாத மாணவர்கள்

2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் அடிப்படையில் தகுதி பெற்ற பள்ளியைப் பெறாத அல்லது சரியான காரணங்களுக்காக இடமாற்றம் கோர விரும்பும் மாணவர்களுக்கு, மேல்முறையீடுகளை ஒன்லைனில் சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், மேல்முறையீடுகளுக்கான காலக்கெடு பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், அனைத்து மேல்முறையீடுகளும் ஒன்லைன் தளத்தின் மூலம் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகத்திற்கு பிரத்தியேகமாக சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version