Home முக்கியச் செய்திகள் மட்டக்களப்பில் ரணிலுக்கு வலுக்கும் ஆதரவு : மகிழ்ச்சியில் ஆதரவாளர்கள்

மட்டக்களப்பில் ரணிலுக்கு வலுக்கும் ஆதரவு : மகிழ்ச்சியில் ஆதரவாளர்கள்

0

மட்டக்களப்பில் (Batticaloa) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) ஆதரவாளர்கள் பட்டாசு கொளுத்தி தமது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.

இன்று(15.08.2024) காலை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ததை அடுத்து மக்கள் தமது ஆரவாரத்தை இவ்வாறு வெளிப்படுத்தினர்.

மட்டக்களப்பிலுள்ள ஜனாதிபதி தேர்தல் அலுவலகத்துக்கு முன்னால் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்கு உறுதுணை வழங்கும் வகையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

தொங்கவிடப்பட்ட பதாகைகள்

இதன்போது ஆதரவாளர்களால் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவின் புகைப்படம் தாங்கிய பதாகைகள் தொங்கவிடப்பட்டு, பட்டாசு கொழுத்தி வரவேற்றனர்.

 

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் (TMVP) இளைஞர் அணி தலைவர் எஸ்.சுரேஸ்குமாரின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் அக்கட்சியின் பிரதேச
அமைப்பாளர்கள் இளைஞர் அணி அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும்
இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

https://www.youtube.com/embed/9WgpoNP06Yk

NO COMMENTS

Exit mobile version