Home இலங்கை அரசியல் தமிழர் பகுதியில் சஜித்தின் ஆதரவாளர்கள் பட்டாசு கொளுத்தி ஆரவாரம்

தமிழர் பகுதியில் சஜித்தின் ஆதரவாளர்கள் பட்டாசு கொளுத்தி ஆரவாரம்

0

மட்டக்களப்பில் (batticaloa) எதிர்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும்  சஜித் பிரமதாச (Sajith Pramadasa
) ஜனாதிபதி வேட்பாளருக்கான வேட்புமனு தாக்கல் செய்வதை அடுத்து ஆதரவாளர்கள் பட்டாசு கொளுத்தி தமது ஆதரவை வெளிப்படுத்தி இருந்தனர்.

குறித்த நிகழ்வானது மட்டக்களப்பு குருக்கள்மடம் பிரதான வீதியில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை (15.08.2024) இடம்பெற்றுள்ளது.

புகைப்படம் தாங்கிய பதாகைகள்

இதன்போது ஆதரவாளர்களாளால் சஜித் பிரேமராச புகைப்படம் தாங்கிய
பதாகைகள் தொங்டவிடப்பட்டு, பட்டாசு கொழுத்தி வரவேற்றனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட தலைவர் ஏற்பாட்டில்
நடைபெற்ற இந்நிகழ்வில் அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பிரசார அமைப்பாளர்கள்,
மகளீர் அமைப்பாளர்கள் இளைஞர் அணி அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள் பொதுமக்கள் என
பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.  

https://www.youtube.com/embed/9WgpoNP06Yk

NO COMMENTS

Exit mobile version