Home சினிமா சென்சேஷனல் நடிகருடன் இணையும் மாரி செல்வராஜ்.. காத்திருக்கும் வெறித்தனமான சம்பவம்

சென்சேஷனல் நடிகருடன் இணையும் மாரி செல்வராஜ்.. காத்திருக்கும் வெறித்தனமான சம்பவம்

0

 மாரி செல்வராஜ்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருகிறார் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர்.

அந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து, கர்ணன், மாமன்னன் என அடுத்தடுத்து படங்களை இயக்கினார். சமீபத்தில், தன் உண்மை வாழ்க்கை சம்பவத்தை வைத்து வாழை என்ற படத்தை இயக்கினார் மாரி செல்வராஜ்.

நான் இவர்களின் மிகப்பெரிய ரசிகை.. நடிகை திரிஷா கூறிய அதிரடி ரகசியம்

அந்த படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூலில் சாதனை படைத்தது. அதுமட்டுமில்லாமல், பல நட்சத்திரங்கள், இயக்குனர்கள் என அனைவரும் இந்த படத்தை பாராட்டினர்.

மாரி செல்வராஜ் – கார்த்தி

தற்போது, நடிகர் துருவ் விக்ரமை வைத்து பைசன் என்ற படத்தை இயக்கி வருகிறார். அதற்கு அடுத்து அவர் நடிகர் தனுஷ் கூட்டணியில் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டு அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வந்ததாகவும்.

ஆனால், சில காரணத்தினால் அந்த கூட்டணி கைவிடப்பட்டதாகவும், அதனால் இந்த கதையை தற்போது நடிகர் கார்த்தியிடம் கூறி அவர் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது, இந்த படத்தை Prince Pictures தயாரிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

NO COMMENTS

Exit mobile version