Home இலங்கை அரசியல் சர்ச்சையை கிளப்பிய சந்திரசேகரனின் கடல் அட்டைப் பண்ணை கருத்து!

சர்ச்சையை கிளப்பிய சந்திரசேகரனின் கடல் அட்டைப் பண்ணை கருத்து!

0

அட்டை பண்ணை தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் (Ramalingam Chandrasekar) தெரிவித்துள்ள கருத்து, அவர் தொடர்பிலான சர்ச்சைக்குரிய கேள்விகளை எழுப்புவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் (Jaffna)- குருநகர் பகுதியில் கடல் அட்டைப் பண்ணையாளர்களுடனான
கலந்துரையாடலின் அவர் தெரிவித்த கருத்தே இவ்வாறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

அதாவது, கடல் அட்டைப் பண்ணை எல்லோருக்கும் வழங்குவோம் பயப்பட வேண்டாம் எனவும் நீங்கள் ஒன்றரை
ஏக்கர் பண்ணை வைத்திருந்தால் அரை ஏக்கருக்கு அரசுங்கத்திற்கு பணம் கட்டினால்
போதும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆட்சி காலம்

கடந்த ஆட்சி காலங்களில் கடல் அட்டை பண்ணைகளுக்கு எதிராக சந்திரசேகரன் கருத்து
தெரிவித்து வந்தார்.

தற்போது அமைச்சராக உள்ள நிலையில் சட்ட விரோதமாக கடல் அட்டை பண்ணைகளை
மேற்கொண்டு வருகின்றவர்களை பாதுகாக்கும் பொருட்டு அரசாங்கத்துக்கு நட்டத்தை
ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்தமையை காணக்கூடியதாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடற்றொழில் மக்கள் 

கடந்த காலங்களில் சீன நிறுவனம் ஒன்றின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் – அரியாலைப் பகுதியில்
கடல் அட்டை உற்பத்தி நிலையம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அது பல்வேறு
சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

இவ்வாறான ஒரு நிலையில் ஆழம் குறைந்த யாழ்குடா கடற் பரப்பில் பாரம்பரிய மீன்
பிடியை நம்பி பல கடற்றொழில் மக்கள் வாழ்ந்து வரும் நிலையில் கடல் அட்ட பண்ணைகளை மீள
ஏக்கர் கணக்கில் வழங்க முற்படுவது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழித்து பல்
தேசிய கம்பனிகளை ஊக்குவிக்கும் செயற்பாடா என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளளதாக கூறப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version