Home இலங்கை சமூகம் வெற்றிலைக்கேணி பகுதியில் கடலுக்குச் சென்ற கடற்தொழிலாளர் உயிரிழப்பு

வெற்றிலைக்கேணி பகுதியில் கடலுக்குச் சென்ற கடற்தொழிலாளர் உயிரிழப்பு

0

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் கடற்தொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (23.10.2025) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

திடீர் சுகவீனம்

வெற்றிலைக்கேணியில்
இருந்து படகுமூலம் கடலுக்கு மீன்பிடி நடவடிக்கைக்காகச் சென்ற ஜோசேப் துரைராசா
அன்ரனி ஜோசேப் எனும் 44 வயதுடைய குடும்பஸ்தருக்கு திடீர் சுகவீனம்
ஏற்பட்டுள்ளது.

குறித்த குடும்பஸ்தர் தனக்கு சுகவீனம் ஏற்பட்டுள்ளதாக தனது மனைவிக்கு
தொலைபேசிமூலம் தெரிவித்து உதவிக்கு சிலரை அழைத்துள்ளார்.

உடனடியாக இன்னொரு படகுமூலம் தரையில் இருந்து கடலுக்கு உதவிக்கு சென்றவர்கள்
குறித்த கடற்தொழிலாளரை மீட்டு கரைக்கு கொண்டு வந்ததுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில்
அனுமதித்தனர்.

பிரேத பரிசோதனை

குறித்த நபரை பரிசோதித்த வைத்தியர் ஏற்கனவே குறித்த நபர் உயிரிழந்ததாக
தெரிவித்துள்ளார்.

பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. இந்த நிலையில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான கடற்தொழிலாளரின் இழப்பு அப்பகுதியில் பெரும் சோகத்தை
ஏற்படுத்தியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version