Home இலங்கை சமூகம் யாழில் முரல் மீன் தாக்கி கடற்றொழிலாளர் உயிரிழப்பு

யாழில் முரல் மீன் தாக்கி கடற்றொழிலாளர் உயிரிழப்பு

0

யாழ்ப்பாணம்(Jaffna) – குருநகர் பகுதியில் இருந்து கடற்றொழிக்குச் சென்ற கடற்றொழிலாளர் ஒருவர்
முரல் மீன் குத்தி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவமானது நேற்று(01.07.2024) இரவு இடம்பெற்றுள்ளது.

இதன்போது குருநகரைச் சேர்ந்த
இரண்டு பிள்ளைகளின் தந்தையான 29 வயதான மைக்கேல் கொலின் டினோ என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணை

இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில்(Teaching Hospital Jaffna) வைக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version