Home இலங்கை சமூகம் இந்திய கடற்றொழிலாளர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் போராட்டம்

இந்திய கடற்றொழிலாளர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் போராட்டம்

0

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தங்கச்சிமடத்தில் இன்று(04.10.2024) குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை சிறையில் உள்ள கடற்றொழிலாளர்களை உடனடியாக மீட்டு தர கோரி அவர்களின் குடும்பத்தினர் இதன்போது பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

உண்ணாவிரத போராட்டம்

தமிழ்நாடு ராமநாதபுரம் – ராமேஸ்வரம்  துறைமுகத்தில் இருந்து
சனிக்கிழமை கடற்றொழிலுக்கு சென்று எல்லை தாண்டியதாக கைது
செய்யப்பட்ட 17 பேர் உட்பட முன்னதாக சிறைபிடிக்கப்பட்டு இலங்கை சிறையில்
உள்ள சுமார் 150ற்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இலங்கை கடற்படை வசமுள்ள நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி
உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 175ற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும்
நாட்டு படகுகள் உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி இன்று காலை முதல்
தங்கச்சிமடம் வலசை பேருந்து நிலையத்தில்விசைப்படகு கடற்றொழிலாளர்கள் மற்றும்
சிறையில் உள்ள கடற்றொழிலாளர்களின் உறவினர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு
வருகின்றனர்.

Source: https://tamilwin.com/article/fishermen-fast-at-thangachimadam-1727983227

NO COMMENTS

Exit mobile version