Home முக்கியச் செய்திகள் தேடப்பட்டுவந்த கொலையாளி சடலமாக மீட்பு

தேடப்பட்டுவந்த கொலையாளி சடலமாக மீட்பு

0

திருகோணமலையில்(Trincomalee) கொலைச் சம்பவத்துடன் தேடப்பட்டு வந்த சந்தேக நபரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சடலம் மூதூர் காவல்துறை பிரிவிட்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் உள்ள தென்னைமரத் தோட்டமொன்றிலிருந்து இன்று(03.10.2024) காலை மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பட்டித்திடல் – தோப்பூர் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய கந்தவனம் சசிகுமார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொலைச் சம்பவம்

மட்டக்களப்பு(Batticaloa) – களுவாஞ்சிக்குடி காவல்துறை பிரிவிட்குட்பட்ட களுதாவளை பகுதியில் 43 வயதுடைய மனைவியை கொலை செய்த சந்தேகத்தின் பெயரில் தேடப்பட்டு வந்த சந்தேக நபரென உயிரிழந்த நபர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண், கடந்த 24 ஆம் திகதி களுதாவளையிலுள்ள தனது வீட்டில் கொலை செய்யப்பட்டு இரத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, உயிரிழந்த நபர் மனைவியின் கொலை குற்றச்சாட்டில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்து நிலையில் களுதாவளையிலிருந்து தப்பித்து மூதூருக்கு சென்று தலைமறைவாக இருந்த நிலையில் இன்று(03) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காவல்துறை விசாரணை

இந்நிலையில், சந்தேக நபரின் உயிரிழப்பு சம்பவத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் சடலம் உள்ள பகுதிக்கு திருகோணமலை தடயியல் பிரிவு காவல்துறையினர் சென்று பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன், மூதூர் நீதவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌசான் வருகைதந்து சடலத்தை பார்வையிட்டதுடன் பிரேத பரிசோதனைகளுக்காக சடலத்தை திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு மூதூர் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளில் மூதூர் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version