Home முக்கியச் செய்திகள் யாழில் காவல்துறையினருக்கு அதிர்ச்சி கொடுத்த ஐவர்

யாழில் காவல்துறையினருக்கு அதிர்ச்சி கொடுத்த ஐவர்

0

யாழ்ப்பாணம் (Jaffna) காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவு இனைந்து நடத்திய சுற்றிவளைப்பில் 40 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் ஐந்து சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ்.மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்கர் தலமையில் இயங்கும் மாவட்ட காவல்துறை புலனாய்வு பிரிவின் தகவலிலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தின் போது பரந்தன் பகுதியில் வைத்து ஒருவரும் முழங்காவில் பகுதியில் வைத்து நால்வருமாக 5 இளைஞர்கள் போதை மாத்திரைகளுடன் இன்று (29) கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணை

இந்த நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட போதைமாத்திரைகளின் மதிப்பு சுமார் 80 லட்சம் ரூபாய் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.  

NO COMMENTS

Exit mobile version