மலையக பகுதிகளில் நேற்று(16) இரவு முதல் பெய்யும் கனமழை மற்றும் பனிமூட்டம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் போக்குவரத்து
பாதிக்கப்பட்டுள்ளது.
ஹட்டன்-நுவரெலியா மற்றும் ஹட்டன்-கொழும்பு பிரதான வீதிகளில் மற்றும் ஏனைய
சிறிய வீதிகளிலும் அடர்ந்த பனிமூட்டம் நிலவுகிறது.
அறிவுறுத்தல்
ஹட்டன் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு, இந்த வீதிகளில் வாகனங்களை
செலுத்தும்போது, வாகன ஹெட்லைட்களை ஒளிரச் செய்து மெதுவாகவும் கவனமாகவும்
வாகனங்களை செலுத்துமாறு சாரதிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
