அநுர அரசாங்கத்துடன் இணைந்து ஒருபோதும் பதவிகளைப் பெற்றுக்கொள்ள
மாட்டேன் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இன்று (15.11.2025) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எனினும் தற்போதைய அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைக்கு தனது ஆதரவு வழங்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்திற்கு ஆதரவு
மேலும் கருத்து தெரிவித்த அவர், “இந்த நாட்டை நாசமாக்கியதற்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்களே எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் ஒன்றுகூடுகின்றனர்.
இந்தத் தரப்பை நம்புவதற்கு நாட்டு மக்கள் தயாராக இல்லை.
இந்த நாட்டை குறித்த தரப்பினரே மாறி, மாறி ஆட்சி செய்தனர்.
அந்தக் காலப்பகுதியில் இவர்களால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியவில்லை.
இவர்கள் இனி என்ன செய்யப் போகின்றனர்” என சரத் பொன்சேகா கேள்வி எழுப்பியுள்ளார்.
