Home முக்கியச் செய்திகள் 450 சிசி க்கு மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவு

450 சிசி க்கு மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவு

0

450 சிசி க்கு மேற்பட்ட எஞ்சின் திறன் கொண்ட பத்தாயிரம் உயர் திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்ய மோட்டார் போக்குவரத்து திணைக்களம் முடிவு செய்துள்ளது.

இதற்காக போக்குவரத்து அமைச்சும் பொது பாதுகாப்பு அமைச்சும் இணைந்து அமைச்சரவை பத்திரத்தை தயாரித்துள்ளதுடன், அது அடுத்த சில வாரங்களில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

சுங்க வரி செலுத்தாமல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட

சுங்க வரி செலுத்தாமல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட பதிவு செய்யப்படாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் இருப்பது தெரியவந்தது.

குற்றச் செயல்களைச் செய்துவிட்டு தப்பிச் செல்லும் மோட்டார் சைக்கிள்களைத் துரத்துவதற்கு அவற்றின் இயந்திரத் திறன் போதாது எனக் கூறி காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட 650 என்ஜின் திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களைப் பதிவு செய்ய முதலில் காவ்துறையினர் விரும்பவில்லை.

பொருளாதார நெருக்கடியால் திணறும் எம்பிக்கள் : சொகுசு வாகனங்கள் விற்பனை

பதிவிற்கு 15 லட்சம் ரூபாய் 

எவ்வாறாயினும், இந்த மோட்டார் சைக்கிள் தொடர்பான கலந்துரையாடலின் போது போக்குவரத்து அமைச்சுக்கும் பொது பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையில் எட்டப்பட்ட உடன்படிக்கைகளின்படி, 450 குதிரைத்திறனுக்கும் அதிகமான இயந்திர திறன் கொண்ட மோட்டார் சைக்கிள் பதிவின் போது கூடுதல் கட்டணத்திற்கு உட்பட்டு பதிவு செய்யப்பட உள்ளது.

இலங்கையில் புதுமணத் தம்பதிகளிடையே அதிகரித்துள்ள விவாகரத்து

அதன்படி, 1000 என்ஜின் திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களுக்கு 15 லட்சம் ரூபாய் வசூலிக்கப்படும். இவ்வாறு பதிவுசெய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களை மோட்டார் கிராஸ் போட்டிகளுக்கு மேலதிகமாக சாலையில் ஓட்டலாம். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version