Home இலங்கை குற்றம் முன்னாள் இராணுவ சிப்பாய் சி.ஐ.டியினரால் கைது

முன்னாள் இராணுவ சிப்பாய் சி.ஐ.டியினரால் கைது

0

கொழும்பு – பிலியந்தலை பிரதேசத்தில் வெளிநாட்டுத் துப்பாக்கியுடன் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று(11)  குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய முன்னாள் இராணுவ சிப்பாய் ஆவார்.

மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version