Home இலங்கை குற்றம் வழிப்பறியில் ஈடுபட்ட முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட மூவர் கைது

வழிப்பறியில் ஈடுபட்ட முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட மூவர் கைது

0

வீதியில் போகும் பெண்களிடம் வழிப்பறி செய்யும் நகைகளை விற்பனை செய்து வந்த முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹங்வெல்ல, தும்மோதர பிரதேசத்தில் உள்ள பஞ்ஞாகுல பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

குறித்த மூவரும் அவ்வாறு வழிப்பறி நகைகளை விற்பனை செய்து கிடைக்கும் வருமானத்தில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட நகைகள் மற்றும் பணம்

சந்தேகநபர்களைக் கைது செய்யும் போது அவர்களிடம் இருந்த வழிப்பறி நகைகள் மற்றும் பணத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.  

Source: https://tamilwin.com/article/former-police-officer-arrested-for-robbery-1736797674

NO COMMENTS

Exit mobile version