Home இலங்கை அரசியல் இந்திய – இலங்கை உறவு : அநுரவிற்கு பாராட்டு தெரிவித்த ரணில்

இந்திய – இலங்கை உறவு : அநுரவிற்கு பாராட்டு தெரிவித்த ரணில்

0

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு (Anura Kumara Dissanayake) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், “ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (16) புதுடில்லியில் வெளியிட்ட கூட்டறிக்கையில் இருந்து இந்திய-இலங்கை ஒத்துழைப்பை மேலும் ஸ்திரப்படுத்தி வலுப்படுத்தும் விடயம் வரவேற்க்கத்தக்கது என அவர் தெரிவித்துள்ளார்.

பிராந்திய ஆற்றல்

அத்தோடு, திருகோணமலையை பிராந்திய ஆற்றல் மற்றும் கைத்தொழில் மையமாக அபிவிருத்தி செய்து பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கையை முன்னோக்கி கொண்டு செல்வது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நாடு சுதந்திரமடைந்ததன் பின்னரான வரலாற்றில் மிக முக்கியமானதொரு தருணத்தில் இலங்கை ஜனாதிபதியின் இந்திய (India) விஜயம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version