யாழ்ப்பாணத்தில் பல்வேறு விதமான போதைப்பொருள்களை வைத்திருந்த நால்வர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுன்னாகம் காவல் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில், சுன்னாகம் காவல் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை பொறுப்பதிகாரியின் கீழ் இயங்கும் குழுவினரால் நேற்றையதினம் (15) குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஹெரோயின், கஞ்சா, போதை மாத்திரைகள் மற்றும் ஐஸ்
போதைப்பொருள் வைத்திருந்த நான்கு சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
நால்வர் கைது
சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட கந்தரோடை பகுதியில் வைத்து 25 வயதான அளவெட்டி
பகுதியைச் சேர்ந்த ஒருவர் 50 கிராம் ஹெரோயின் மற்றும் 1000 மில்லிகாராம் ஐஸ்
போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுளாளார்.
மேலும் கஞ்சாவுடன் ஒருவரும், போதை
மாத்திரைகளுடன் இருவரும் என மொத்தமாக நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர், யாழ்ப்பாணம்
மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபர், யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட
பிரதி காவல்துறை அத்தியட்சகர், உதவி காவல்துறை அத்தியட்சகர் ஆகியோரின்
வழிகாட்டலின் கீழ் இந்த கைது
நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான
நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
