ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அங்கத்தவர்களை இராணுவ வீரர்களாக அடையாளப்படுத்தி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் கோடிக்கணக்கான பணத்தை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பெற்றுக்கொண்டதாக அக்கட்சியின் முன்னாள் உறுப்பினர் சுப்பையா பொன்னையா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று (11.12.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அங்கத்தவர் ஒருவருக்கு 65,000 ரூபா வரை கணக்கு காட்டி டக்ளஸ் தேவானந்தா பணத்தை பெற்றுக்கொண்டார். எனினும், அதில் 15,000 ரூபாவிற்கும் குறைவான சம்பளமே வழங்கப்பட்டது.
அதிலும், 3,000 ரூபாவை சேமலாப நிதி போன்று கழித்துக்கொள்வார்கள். அந்தப் பணம் ஓய்வு பெற்ற பின்னர் சேர்த்து வழங்கப்படும் என்று கூறியிருந்த போதிலும் எங்களுக்கு அது கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் குறிப்பிடுகையில்,
