Home இலங்கை சமூகம் இலவச தொடருந்து சேவை குறித்து அறிவிப்பு

இலவச தொடருந்து சேவை குறித்து அறிவிப்பு

0

எதிர்வரும் பொசோன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு விசேட இலவச தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட உள்ளது.

நாளைய தினம் முதல் ஒரு வார காலத்திற்கு இந்த இலவச தொடருந்து சேவை முன்னெடுக்கப்பட உள்ளது.

அனுராதபுரத்திற்ம் மிஹிந்தலைக்கும் இடையில் இந்த இலவச தொடருந்து சேவை மேற்கொள்ளப்பட உள்ளது.

எவ்வாறெனினும் மாஹோ தொடருந்து நிலையத்திலிருந்து அனுராதபுரத்திற்கு தொடருந்துகள் பயணம் செய்யாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு நிகழ்வுகள்

இதன் காரணமாக மஹோவிலிருந்து விசேட தொடருந்து சேவையொன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய பொசோன் வாரம் நாளைய தினம் ஆரம்பமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பொசோன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் அனுராதபுரம் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version