Home இலங்கை அரசியல் ஜனாதிபதியை பாராட்டிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்

ஜனாதிபதியை பாராட்டிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்

0

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன்(Rishad Bathiudeen) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு(Ranil Wickremesinghe) பாராட்டு தெரிவித்துள்ளார்.

மன்னார்(Mannar) மாவட்டத்தின் அபிவிருத்திக்காக அதிகூடிய நிதி ஒதுக்கீட்டை வழங்கியமைக்காகவே அவர் ஜனாதிபதியை பாராட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரச்சினை

மன்னாருக்கு நேற்று (16) விஜயம் செய்த ஜனாதிபதி மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் கலந்துகொண்டுள்ளார்.

இதன்போது மன்னார் – மடு தேவாலய வீதித் தடை உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்த்து மாவட்டத்தின் அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்லும் ஜனாதிபதியின் தலைமைத்துவம் பாராட்டுக்குரியதென்று அவர் தெரிவித்துள்ளார்.     

NO COMMENTS

Exit mobile version