கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளுக்கான அனுமதி அட்டைகள் அடுது்த வாரம் முதல் விநியோகிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.
வெளிநாட்டவரை மிரட்டிய கொத்து விற்பனையாளருக்கு நீதிமன்றம் வழங்கிய கடுமையான உத்தரவு
பரீட்சார்த்திகளுக்கான அறிவுறுத்தல்
இதன்படி, பாடசாலை விண்ணப்பதாரிகள் அதிபர்களினூடாக பரீட்சை அனுமதி அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும்.
தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் தபாலினூாடக பரீட்சை அனுமதி அட்டைகளை பெற்றுக் கொள்ள முடியும்.
எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை, எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இம்முறை பரீட்சைக்கு 452,979 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
வேகமாக அதிகரிக்கும் அமெரிக்க டொலரின் பெறுமதி
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : அவுஸ்திரேலிய கத்தோலிக்கர்களின் கோரிக்கை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |