Home இலங்கை கல்வி சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு

0

கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இதனை தெரிவித்துள்ளார்.

பெறுபேறுகள்

இதற்கமைய எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் பெறுபேறுகள் வெளியிடவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெறுபேறுகளுக்கான ஆவணங்களை தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், 2023(2024) ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை கடந்த மே மாதம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.  

மேலதிக தகவல் – அனாதி

NO COMMENTS

Exit mobile version