Home இலங்கை கல்வி சாதாரண தர பரீட்சை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

சாதாரண தர பரீட்சை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

0

 நாளை (11) நள்ளிரவுக்குப் பின்னர் 2024 க.பொ.த சாதாரண தர பரீட்சைகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டால் பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மேற்படி காலப்பகுதியில் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான கற்பித்தல் வகுப்புகள் நடத்தப்படுமாயின் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தகவல்களை வழங்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வகுப்புகள்


பொலிஸ் தலைமையகம் – 0112421111 , பொலிஸ் நிலைய அவசர எண் – 119 , இலங்கை பரீட்சைகள் திணைக்களம் – 1911 , பாடசாலை பரீட்சை அமைப்பு மற்றும் முடிவுகள் கிளை – 011 278 4208 / 011 278 4537
ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தகவல்களை வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான (G.C.E O/L) அனைத்து பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகள் அனைத்தும் நாளை 11 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பமாகி எதிர்வரும் 26 ஆம் திகதி நிறைவடைய உள்ளன.    

NO COMMENTS

Exit mobile version