Home இலங்கை குற்றம் கணேமுல்ல சஞ்சீவ கொலை: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

கணேமுல்ல சஞ்சீவ கொலை: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

0

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

அன்றையதினம் சந்தேகநபர், அடையாள அணிவகுப்பிற்கு முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் எனவும் நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த மற்றுமொரு சந்தேகநபரான சாரதியை, இந்த மாதம் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடும் பாதுகாப்பு

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேகநபர்களும் கடும் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Source: https://tamilwin.com/article/ganemulla-sanjeewa-assassination-court-order-1747816443

NO COMMENTS

Exit mobile version