Home இலங்கை கல்வி சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

0

க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு அழகியல் பாட செய்முறைப் பரீட்சை தொடர்பில் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி அழகியல் பாட செய்முறைப் பரீட்சை 2025.05.21 ஆம் திகதி தொடக்கம் 2025.05.31ஆம் திகதி வரை இடம்பெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 

அறிக்கை ஒன்றை வெளியிட்டு பரீட்சைகள் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

மேலும் நாடு முழுவதும் 171,100 பரீட்சார்த்திகளுக்காக 1,228 பரீட்சை நிலையங்களில் குறித்த செய்முறைப் பரீட்சைகள் நடைபெறும் எனவும் பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ்.இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version