Home இலங்கை கல்வி அதிகஸ்ட பிரதேச பாடசாலையில் சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவி

அதிகஸ்ட பிரதேச பாடசாலையில் சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவி

0

2023ஆம் கல்வியாண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று அதிகாலை வெளியாகியிருந்தன.

இதனடிப்படையில், நாடளாவிய ரீதியில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களது விபரங்கள் தற்போது வெளியாகி வருகின்றன.

சிறந்த பெறுபேறுகள்

இந்த நிலையில், அதிகஸ்ட பாடசாலையான  வவுனியா – சின்னடம்பன் வித்தியாலயத்தின் பாடசாலை வரலாற்றில் மிகச் சிறந்த பெறுபேறு இம்முறை கிடைக்கப்பெற்றுள்ளது.

இதன்படி, செந்தில்குமரன் தமிழருவி என்ற மாணவி 7A, B, C என்ற பெறுபேற்றைப் பெற்று பாடசாலை சமூகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

இதேவேளை,  குறித்த பாடசாலையின் ஏனைய பெறுபேறுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதனடிப்படையில், மாணவி நவரத்தினம் அகலியா – 3A, 3B, 2C, S

மாணவன் விவேகானந்தராசா பாவரசன் – A, 3B, 3C, 2S

மாணவன் சிவகுமார் சாருஜன் – A, 3B, 4C, S

மாணவி வசந்தகுமார் கிந்துஷா – B, 4C, 4S

மாணவி திருச்செல்வம் நிலாயினி – 3B, 2C, 3S

மாணவி அன்ரன் செல்வகுமார் சன்சிகா – 2B, 3C, 3S  ஆகியோர் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version