Home இலங்கை அரசியல் நவம்பரில் நாடாளுமன்றத் தேர்தல்: வெளியானது வர்த்தமானி

நவம்பரில் நாடாளுமன்றத் தேர்தல்: வெளியானது வர்த்தமானி

0

எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி இலங்கையில் பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பான ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) கையொப்பத்துடனான வர்த்மானி சற்று முன்னர் வெளியான நிலையில் பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல்

இந்த நிலையில், எதிர்வரும் நவம்பர் மாதம் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதுடன், நவம்பர் மாதம் 21ஆம் திகதி புதிய நாடாளுமன்ற அமர்வு கூடவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதேவேளை, அக்டோபர் 4 முதல் 11ஆம் திகதி நண்பகல் வரையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

Source: https://ibctamil.com/article/general-election-on-14th-november-1727199848

NO COMMENTS

Exit mobile version