Home இலங்கை பொருளாதாரம் தங்க நகை வாங்க காத்திருப்போருக்கான செய்தி – பவுணொன்றின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

தங்க நகை வாங்க காத்திருப்போருக்கான செய்தி – பவுணொன்றின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

0

24 கரட் தங்க பவுண் ஒன்றின் விலை 1000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில் இன்று (26) இந்த விலை அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

தங்க பவுணின் விலை

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 337,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 310,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,125 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 38,750 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version