2026இல் தங்கத்தின் விலையில் எதிர்பாராத ஒரு மாற்றம் ஏற்படும் எனவும் மிக மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்படும் எனவும் பாபா வங்கா மேற்கொண்டுள்ள கணிப்பு சர்வதேச ரீதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாபா வங்கா என அழைக்கப்படும் ரையோ தத்சுகி என்ற பார்வையற்ற ஜப்பானிய பெண்ணின் கணிப்புக்கள் பெரிதளவில் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், குறித்த பெண் 2026இல் ஏற்பட போகும் மிக மோசமான பொருளாதார நெருக்கடி தொடர்பில் கணித்துள்ளதாக சர்வதேச ஊடகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி
எனவே, பாபா வங்காவின் கணிப்பின் படி, 2026 இல் தங்கத்தின் விலைகள் எதிர்பாராத விதமாக மாற்றத்தை எதிர்நோக்கும் என்று அவர் கணித்ததாக குறித்த ஊடகங்கள் கூறுகின்றன.
மேலும், சிலர் தங்கம் அதன் பாதுகாப்பான புகலிட நிலையை இழக்கக்கூடும் என்றும், மற்றவர்கள் அது உயரும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.
உதாரணமாக, பண வீழ்ச்சி ஏற்பட்டால் தங்கம் “பயனற்றதாக” மாறும் என்றும் பிற பொருட்களைப் போலவே தங்கமும் சாதாரண ஒரு பொருளாக மாறும் எனவும் பாபா வங்கா கணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, உலக நாணய அமைப்புகளில் சரிவு அல்லது கூர்மையான திருத்தம், வங்கி தோல்விகள் மற்றும் 2026இல் அதிக பணவீக்கம் போன்ற ஒரு கடுமையான நிதி நெருக்கடியும் ஏற்படும் என கூறப்படுகின்றது.
இந்த கணிப்பின் காரணமாக சர்வதேச ரீதியில் கடும் பொருளாதார நெருக்கடி குறித்து கவலைகள் அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
