Home இலங்கை கல்வி ஆசிரிய பயிற்றுவிப்பாளர்களுக்கான புதிய மாற்றங்கள்: வெளியான அறிவிப்பு

ஆசிரிய பயிற்றுவிப்பாளர்களுக்கான புதிய மாற்றங்கள்: வெளியான அறிவிப்பு

0

தேசிய கல்விப் பீடங்களில் பயிலும் ஆசிரிய பயிற்றுவிப்பாளர்களுக்கு மன அழுத்தமில்லாத கற்றல் சூழலை உருவாக்குவது மற்றும் கல்விப் பீடங்களின் தரத்தை மேம்படுத்துவதற்கான செயல் திட்டத்தைத் தொடங்குவது குறித்து தனது சிறப்பு கவனம் செலுத்தப்படவுள்ளது.

குறித்த விடயத்தை கல்வி மற்றும் உயர்கல்வி துணை அமைச்சர் டாக்டர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

தேசிய கல்விக் கழகங்களின் பீடாதிபதிகளுக்கான பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சின் வளாகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

பீடங்களின் பீடாதிபதி

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள அனைத்து கல்விப் பீடங்களின் பீடாதிபதிகளும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

உள்கட்டமைப்பு வசதி

அத்தோடு, ஒவ்வொரு கல்விப் பீடத்தின் கல்வி, கல்விசாரா பிரச்சினைகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளின் மேம்பாடு தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் கல்வியாளர்களுக்கு தரமான கற்றல் சூழலை உருவாக்குவதற்காக இதுவரை தீர்க்கப்படாத பிரச்சினைகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்துவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறிப்பிட்ட சிக்கல்கள் உள்ள பீடங்களுக்கு கண்காணிப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விரைவான தீர்வுகளை வழங்குவதாகவும் துணை அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/gov-special-education-program-for-teacher-trainers-1752949101

NO COMMENTS

Exit mobile version