Home இலங்கை சமூகம் நுவரெலியாவில் அரச வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்:விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

நுவரெலியாவில் அரச வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்:விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

0

நுவரெலியா (Nuwara Eliya) பிரதான நகரில் உள்ள அரச வங்கி ஊழியர்கள் சம்பளத்தை அதிகரிக்க கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டமானது இன்று (4) நுவரெலியா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

பாரிய போராட்டம்

இதன்போது, எமது நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்
அரச வங்கி ஊழியர்களுக்கு வரிச்சுமைக்கு ஏற்ற சம்பளம் ஒன்றை உடன் பெற்றுத்தருக
, ஏனைய அரச ஊழியர்கள் போல் எங்களுக்கு அனைத்து சலுகைகளும் பெற்று தாருங்கள் ,
அரச வங்கிகளின் சம்பள அதிகரிப்பை உடன் உயர்த்துங்கள் போன்ற வாசகங்கள் அடங்கிய
பதாதைகளை ஏந்தியும், கோசங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும்,  அரசாங்கம் வங்கி ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க விட்டால் நாடு
முழுவதும் சென்று பாரிய போராட்டங்களை நடத்த இருப்பதாகவும் போராட்டத்தில்
கலந்துகொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version