Home இலங்கை சமூகம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெருந்தலைவர் சம்பந்தனின் புகழுடலுக்கு வடக்கு ஆளுநர் அஞ்சலி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெருந்தலைவர் சம்பந்தனின் புகழுடலுக்கு வடக்கு ஆளுநர் அஞ்சலி

0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெருந்தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனின்(R.Sampanthan) புகழுடலுக்கு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்(P.S.M.Charles) அஞ்சலி செலுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் வைக்கப்பட்டுள்ள அன்னாரின் புகழுடலுக்கு
இன்று(4) அஞ்சலி செலுத்தியதுடன், அவரின் உருவப்படத்துக்கும் மலர்த்தூவி அஞ்சலி
செலுத்தினார்.

மேலும், சம்பந்தனின் உறவினருடன் ஆளுநர் தனது அனுதாபங்களையும் பகிர்ந்துகொண்டார்.

சம்பந்தனுக்கு அஞ்சலி 

மேலும், இன்றைய தினம் வடக்கு மாகாண ஆளுநர் உட்பட இந்தியத் துணைத்தூதுவர்
சாய் முரளி, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறீதரன்,
சார்ள்ஸ் நிர்மலநாதன், தர்மலிங்கம் சித்தார்தன், முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன், சுரேஷ் பிரேமச்சந்திரன், வடக்கு
மாகாண அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம், தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர்
ப.சத்தியலிங்கம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சி
சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், கட்சிப் பிரமுகர்கள், ஆதரவாளர்கள்,
பொதுமக்கள் உட்படப் பலர் அஞ்சலி செலுத்தினர்.

சம்பந்தனின் புகழுடல் நாளை(5) காலை யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் இருந்து
திருகோணமலைக்கு(Trincomalee) எடுத்துச் செல்லப்பட்டு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை
இறுதிக்கிரியைகள் இடம்பெறவுள்ளது.

NO COMMENTS

Exit mobile version