ஒருங்கிணைந்த எதிர்கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட நுகேகொடை கூட்டத்துக்கு அரசாங்கம் எவ்வித இடையூறும் செய்யவில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர தெரிவித்தார்.
நுகேகொட கூட்டத்தை சீர்குலைக்க அரசாங்கம் சதி செய்ததாக கூட்டு எதிர்க்கட்சி முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கனவு இளவரசர்
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“ஐஸ்லாந்தின் கனவு இளவரசர் மீண்டும் ஒருமுறை சிதைந்து விட்டார் என்பதை நுகேகொட கூட்டம் வெளிப்படுத்தியது. ரணில் மற்றும் மஹிந்த போன்றவர்கள் மக்களால் தூக்கி எறியப்பட்டனர்.
எனவே, அரசியல் ரீதியாக வங்குரோத்து அடைந்தவர்களை மீண்டும் உயிர்த்தெழுப்ப முடியாது” என மேலும் தெரிவித்தார்.
