விலைகளை உயர்த்த முயற்சிகள் தொடர்ந்தால், வாரத்திற்குள் உப்புக்கு அதிகபட்ச சில்லறை விலையை (MRP) அறிமுகப்படுத்த அரசாங்கம் கட்டாயப்படுத்தப்படும் என்று வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
ஊடக சந்திப்பு ஒன்றில் பேசிய போது அமைச்சர் சமரசிங்க இதனை குறிப்பிட்டார்.
அத்தோடு, உப்பு இறக்குமதியை அனுமதிக்கும் முடிவு உள்நாட்டு பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக மட்டுமே எடுக்கப்பட்டதாகவும் இறக்குமதியாளர்களின் லாபம் ஈட்டுவதற்கு அல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்.
விலை உச்சவரம்பு
“இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ உப்பு 40% அரசாங்க வரி உட்பட ரூ. 77 ஆகும் என்று அவர் குறிப்பிட்டார்.அதன் விலை கிலோவுக்கு ரூ. 80 என்று வைத்துக்கொள்வோம்.
பின்னர் மொத்த வியாபாரிகள் நியாயமான லாப வரம்பை – ரூ. 10, 20 அல்லது 30 – தக்க வைத்துக் கொள்ளலாம், ஆனால் அதற்கு மேல் இல்லை” என்று அமைச்சர் மேலும் கூறினார்.
தற்போதைய பற்றாக்குறையைப் பயன்படுத்திக் கொள்வதற்கு எதிராக எச்சரித்த சமரசிங்க, இறக்குமதியாளர்கள் சூழ்நிலையைப் பயன்படுத்தி செயற்கை விலை உயர்வை உருவாக்க முயற்சித்தால், விலை உச்சவரம்பை நிர்ணயிக்க நாங்கள் தயங்க மாட்டோம் என்றார்.
