Home முக்கியச் செய்திகள் பதவி விலகினார் செந்தில் தொண்டமான்

பதவி விலகினார் செந்தில் தொண்டமான்

0

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் (Senthil Thondaman) பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், அவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickramasinghe) தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) கீழ் புதிய அரசாங்கம் அமைக்கப்படவுள்ளது.

பதவி விலகல்

இந்நிலையில், அமைச்சர்கள் மற்றும் ஆளுநர்கள் என பலர் தங்களது பதவி விலகல்கள் குறித்து அறிவித்து வருகின்றனர்.

மேலும், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தனது பதவி விலகல் தொடர்பில் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.     

NO COMMENTS

Exit mobile version