Home இலங்கை அரசியல் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதில் அநுர அரசாங்கத்தின் நிலைப்பாடு

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதில் அநுர அரசாங்கத்தின் நிலைப்பாடு

0

புதிய நாடாளுமன்றம் அமைக்கப்பட்டவுடன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்குவது தொடர்பான விடயத்தை அரசாங்கம் முன்னெடுக்க உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

வாராந்த அமைச்சரவையின் பின்னரான ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (29) கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது தொடர்பில் தற்போது எந்த கலந்துரையாடலும் இடம்பெறவில்லை எனவும், அது தொடர்ந்தும் செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்ட திருத்தம்

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அமைச்சர், பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தங்களை முன்வைத்து அதற்கு நாடாளுமன்றத்தில் அங்கீகாரம் வழங்குவதன் மூலம் மாத்திரமே மாற்றங்களைச் செய்ய முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) திருத்தப்பட வேண்டும் என்ற கருத்து நீண்டகாலமாகவே நிலவி வருகிறதாகவும் புதிய நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமானதும் அரசாங்கம் இதனை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளும் என அமைச்சரவை பேச்சாளர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version