Home முக்கியச் செய்திகள் ரத்து செய்யப்படும் சவேந்திர சில்வா வகித்து வந்த பதவி

ரத்து செய்யப்படும் சவேந்திர சில்வா வகித்து வந்த பதவி

0

ஜெனரல் சவேந்திர சில்வா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி (CDS) பதவியைத் தொடர இலங்கை அரசாங்கம் விரும்பவில்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் பதவியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றும், அந்தப் பதவியின் கடமைகளை பாதுகாப்பு அமைச்சகம் மேற்கொள்ளும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலதிக நடவடிக்கை

தேவைப்பட்டால் மட்டுமே மீண்டும் பதவியை நடைமுறைபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் செயலாளர் சம்பத் துய்யகொந்தா மேலும் குறிப்பிட்டுள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version